மேக்காலத் தோப்புக்குள்ள

என்னை பார்த்துக்காம போறாயே
தாயி /
கார்கால மேகக்கூட்டமும் கொல்லுது
என்ன/
எங்க ராக்காயி பெத்துக்கிட்ட தலப்
புள்ள /
நானும் ஒன்னைய கேட்டுக்கவா
ஒன்னு/
ஊட்டான்டா பக்கம் கூட்டமாக்கும்
அங்குட்டு /
சாத்தான் கண்ணும் பார்த்துக்கும்
எம்மல/
ஆத்தா காதில் போட்டுக்குவான்
பயவுள/
அய்யோ ஒய்யோயென கத்திக்கும்
ஆத்துக்குள்ள/
நாக்கை கடிச்சிக்கிட்டு முறைக்காதே
மூக்காயி/
மேக்காலத் தோட்டத்துக்குள வாயேன்
சின்னத் தாயி /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (18-Sep-22, 7:34 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 39

மேலே