வேம்பு
வேம்பு
********
வெற்றிட மாயுள வீடரு காயொரு
வேம்பினை நாட்டிட வேண்டுமன்றோ
வெற்றியு டேயது வேர்விட நீர்விடு
வீறுட னேவளர்ந் தோங்குமன்றோ
முற்றிலு மாயதன் மூலிகை மாளிகை
முன்னிலை யாயுனைத் தாங்கிடவே
சற்றுணர்ந் தேயதைச் சார்ந்திருப் பாயுனைச்
சத்திய மாய்தினம் காத்திடுமே
*
மெய்யன் நடராஜ்