வேம்பு

வேம்பு
********
வெற்றிட மாயுள வீடரு காயொரு
வேம்பினை நாட்டிட வேண்டுமன்றோ
வெற்றியு டேயது வேர்விட நீர்விடு
வீறுட னேவளர்ந் தோங்குமன்றோ
முற்றிலு மாயதன் மூலிகை மாளிகை
முன்னிலை யாயுனைத் தாங்கிடவே
சற்றுணர்ந் தேயதைச் சார்ந்திருப் பாயுனைச்
சத்திய மாய்தினம் காத்திடுமே
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Oct-22, 1:58 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 60

சிறந்த கவிதைகள்

மேலே