கண்ணீரின் வழியே

கண்ணீரின் வழியே

அந்த மின் மயானத்தின்
கதவுகள்
அப்போது தான்
திறக்கப்பட்டன.

அம்மாவின் உடலருகே
அமைதியாக
நின்றிருந்தாள்
அவள்.

பெண்கள் மயானம்
வரக் கூடாதென்று அங்கே
எவரும் கூறுவதில்லை.

அக்னியில் செலுத்து முன்
கற்பூரம் ஏற்றுக
என்றார்
அங்கிருந்த ஊழியர்.

அவள் ஏற்றிய
கற்பூரத்தோடு
அம்மாவின் உடல்
அக்னியில் புக

அங்கே மட்டும்
அமைதியாய்
அரங்கேறிக்
கொண்டிருந்தது
பெண் சமத்துவம்......

- கமலநாதன்

எழுதியவர் : கமலநாதன் (3-Nov-22, 7:51 am)
சேர்த்தது : Kamalanathan S
Tanglish : kaneerin valiye
பார்வை : 93

மேலே