மறம்கெழு மாமன்னர் யானையால் யானையாத் தற்று - பழமொழி நானூறு 223
இன்னிசை வெண்பா
ஆணம் உடைய அறிவினார் தம்நலம்
மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மானமர் கண்ணாய்! மறம்கெழு மாமன்னர்
யானையால் யானையாத் தற்று. 223
- பழமொழி நானூறு
பொருளுரை:
மான் விரும்பும் கண்ணை உடையாய்! மனத்திட்பம் உடைய அறிஞர்கள் தம்மைக் கல்வியறிவால் ஒத்த அறிஞர்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் வீரம் பொருந்திய பேரரசர்கள் யானையைக் கொண்டு யானைகளைப் பிடித்ததனோடு ஒக்கும்.
கருத்து:
அறிவுடையார் அறிவுடையாரையே சேர்த்துக் கொள்வர்.
விளக்கம்:
அமர் - விரும்புதல். ஆணம் - மனத்திட்பம்,
'யானையால் யானையாத் தற்று' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.