மறம்கெழு மாமன்னர் யானையால் யானையாத் தற்று - பழமொழி நானூறு 223

இன்னிசை வெண்பா

ஆணம் உடைய அறிவினார் தம்நலம்
மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மானமர் கண்ணாய்! மறம்கெழு மாமன்னர்
யானையால் யானையாத் தற்று. 223

- பழமொழி நானூறு

பொருளுரை:

மான் விரும்பும் கண்ணை உடையாய்! மனத்திட்பம் உடைய அறிஞர்கள் தம்மைக் கல்வியறிவால் ஒத்த அறிஞர்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் வீரம் பொருந்திய பேரரசர்கள் யானையைக் கொண்டு யானைகளைப் பிடித்ததனோடு ஒக்கும்.

கருத்து:

அறிவுடையார் அறிவுடையாரையே சேர்த்துக் கொள்வர்.

விளக்கம்:

அமர் - விரும்புதல். ஆணம் - மனத்திட்பம்,

'யானையால் யானையாத் தற்று' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Nov-22, 4:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே