தமிழெங்கள் உயிர்

அறுசீர் விருத்தம்



(1)

தமிழைப் படித்துப் புலவர்
....ஆனாய் மேதை என்றாய்

தமிழை எந்த நூலில்
....படித்து அறிந்தாய் சொல்லு

தமிழை உனக்கு கற்பித்
......தார்யார் பெரியா ரோசொல் ?

தமிழை பக்திச் சுவடி
.....படித்து மதையேன் மறந்தாய் ?

(2).......

தமிழும் நெல்லின் மணிகள்
......அனைத்தும் நன்கு கற்றாய்

தமிழைத் தள்ளிப் பெரியார்
...... வழியை எடுத்தாய் எதற்கு ?

தமிழைக் கற்று என்ன ?
......அடத்தில் அழிந்து நசிந்தாய்

தமிழின் உமியை உமிழ்வை
........தமிழை வளர்க்க முடியா ?

(3)...........

நல்ல தமிழை வளர்க்கா
....கவிஞர் இருந்தும் என்ன ?

பொல்லாக் கவிஞன் தமிழின்
......பொன்றைத் தேடி மறைப்பன்

சில்ல றையாம் பெரியார்
.....இவரைக் கவர்ந்து அழித்தார்

வில்லத் தனமாய் பக்தி
....இலக்கி யமதைத் தள்ளி.

(4).......

கற்ற தமிழால் பிறர்கு
அறிவு சொல்ல மறந்தாய்

பெற்ற தாயின் தந்தை
பெருமை வழியை மறந்தாய்

கற்கா பெரியார் கசடை
அகற்றல் மறந்து புகழ்வை

தற்பெ ருமையும் அகந்தைத்
தள்ளி தமிழைக் காரே

எழுதியவர் : பழனி ராஜன் (27-Nov-22, 9:07 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 56

மேலே