570 எல்லாப் பொழுதினும் இறையை எண்ணுக - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 28

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

உண்ணும் வேலை யினுமல்லி
..னுறங்கும் வேலை யினும்வேலை
பண்ணும் வேலை யினுந்துன்பம்
..படரும் வேலை யினுமின்ப
நண்ணும் வேலை யினும்பாரில்
..நடக்கும் வேலை யினுமொன்றைக்
கண்ணும் வேலை யினுந்தேவைக்
..கண்ணும் வேலை யை(ச்)செய்நெஞ்சே.. 28

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மனமே! உண்ணுங் காலத்தும், இரவு உறங்குங் காலத்தும், உழைக்குங் காலத்தும், துன்பப்படும் பொழுதும், இன்பம் துய்க்குங் காலத்தும், நிலத்தே நடக்கும் பொழுதும், ஒன்றனைக் கருத்தூன்றி நினைக்கும் போதும் ஆண்டவனை மறவாது அன்புடன் நினைப்பாயாக.

வேலை - பொழுது. பண்ணல் - செய்தல். படரல் - உண்டாதல்.
பார் - நிலம். கண்ணல் - கருதல். தேவு - ஆண்டவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-23, 4:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே