விடியல்

விடியலுக்குப் பின்
வான் நிலவு பலரது
கண்களுக்கு தெரிவதில்லை

வான் நிலவுப் போல்
தங்கள் வாழ்க்கையின்
விடியலுக்கு
துணை நின்றவர்கள்
யாரென்பதும்
உயர்ந்தப் பின்பு
சில மனிதர்களின்
கண்களுக்கு தெரிவதில்லை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Jun-23, 4:41 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vidiyal
பார்வை : 554

மேலே