சுதந்திர தினக் கொண்டாட்டம்


நேரிசை வெண்பா


நாட்டின் நலன்கருதி நாட்டுப்பற் றைக்கொடி
பாடியேற்று கூரை பறக்கும்பார் -- காட்டு
மிராண்டியை சேர மிரட்டுவர் தள்ளு
திராவிடத்தை நீயொழிப்பாய் தின்று








கலி விருத்தம்


விடுதலைக் குழைத்தவர் வேண்டா மறைத்து
விடுதலை ஒழிக வென்றவர் திராவிடர்
கடுகள வும்முழைக் கானும் ஆள்வதென்
கடுவனும் காட்டுவன் கருப்புக் கொடியையே


ஒழுகிசை அகவல் நேரிசை ஆசிரியப்பா




மானங் கெட்ட தமிழர் ஈன
மான மில்லாப் விடுதலை வேண்டா
பெரியார் வாழ்க வென்ப தேனாம்
விடுத லையும் வேண்டா மென்ற
படுபா வித்தமிழ் நாட்டை யாள
கொடுமை செய்தவ னிடமே நாட்டின்
கொடியை கோட்டையில் ஏற்றச்
சொன்னார் மானம் கெட்டத் தமிழரே.




எழுதியவர் : பழனி ராஜன் (13-Aug-23, 1:21 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 89

மேலே