என் நெஞ்சில் நிறைந்தவளே 555

ப்ரியமானவளே...


ஆழ்கடலில் கரை தாண்
டும்
ஒரு பயணம்...

அலைகளின்
சப்தத்தில் கேட்காத...

நீ கொடுத்த முதல் முத்தம்
என் கன்னத்தில்...

தி
கைத்து நின்றேன்
உன் முத்தத்தில்...

உன் புருவம் உயர்த்தி
புன்னகைத்தாய்...

உன் புருவ வில்லில்
என்னை சாய்த்தாய்...

உள்ளுக்குள் ஆசை இருந்தும்
வெளிப்படுத்த தெரியாதவன் நான்...

ன் உள்ளுணுர்வுகளை
புரிந்து கொண்டு...

என் தயக்கம்
போக்கியவள் நீ...

உதிக்கும் சூ
ரியனும் சுற்றும்
பூமியும் நிற்கும்வரை...

உன்னையும்
உன் நினைவுகளையும்...

என்றும் உன்னை
விட்டு
ப்ரியமாட்டேன் என்னுயிரே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (16-Oct-23, 7:28 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 409

மேலே