கண்ணன் தாள்
மண்ணில் இருப்போர் மானிடர் அதுபோல்
விண்ணில் இருப்போர் விண்ணோர் தேவர்
மண்ணில் இப்போரில் முதல்வன் ஆள்பவன்
அஃதொப்ப விண்ணோர்த் தலைவன் மகேசன்
அவனே தேவதேவன் கண்ணபிரான்
மன்னோரைப்படைத்தவன் விண்ணோரையும்
மண்ணையும் விண்ணையும் அவனே நம்
எல்லோர்க்கும் தலைவன் அவன் நாமம்
ஏத்திப் புகழ்ந்து நெஞ்சில் இருத்தி
நித்தம் பாடி ஆடி மகிழ்வோம்
அவன் தாளேதான் நமக்கு கதி