அவள்

நிலவைக் கண்டேன் நிலவிலுன்முகம் கண்டேன்
துள்ளும் கயல்கண்டேன் நதியில் நின்முகத்தில்
அள்ளித்தரும் அழகு சேர்க்கும் கண்களாய் அதுவே
ஆடும் தோகை மயில் கண்டேன் ஆடிவரும்
உன்னடை அழகு அந்த மயில் ஆனதே
மணக்கும் மல்லிகைப்பூ கண்டேன் என்னருகில்
நீவருகையில் அப்பூவின் மணம் நுகர்ந்தேன் நான்
தென்றல் வீசும் பூந்தோட்டத்தில் உனைக் கண்டேன்
தென்றலாய் மெல்லிடையாள் என்னைநீ தீண்டிடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Nov-23, 4:58 pm)
Tanglish : aval
பார்வை : 73

மேலே