குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.

அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;

அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு

முன்னிலை யாக்கல்.

மெய்தொட்டுப் பயிறல்.

(இ-ள்) தலைவன் தலைவி சரீரத்தின் ஓருறுப்பைத் தீண்டிப் பழகுதல்; அஃதாவது: கூந்தலிலுள்ள வண்டுகளை யோட்டுதல் போலத் தோளைத் தொட்டுரையாடல்.

கட்டளைக் கலித்துறை

கோடாத நீதிச்செங் கோலான் குலோத்துங்கன் கோழிமின்னார்
தோடார் மலர்க்குழல் சூழ்வண்டு காடுய்ய பாட(ல்)செய்தும்
பீடார்பொற் றாமரைச் சங்கமுற் றும்பெருங் காவியங்க
ளூடா டியுமிவர் நூலைய மேது முணர்ந்திலிரே! 8

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (24-Dec-23, 6:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே