மலரிதழாள் வந்தாய் புதுவான் நிலவினைப் போல்
உதயகீதம் பாட உயர்வான் பறவை
முதலில் மலர்ந்த மலரெலாம் ஆட
மதுவினைச் சிந்தும் மலரிதழாள் வந்தாய்
புதுவான் நிலவினைப் போல்
-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
---எதுகை --உத முத மது புது
---மோனை --உ உ , மு ம , ம ம , பு ப --1 3 ஆம் சீர்களில்
உதயகீதம் பாட உயர்வானின் பறவை
முதலிலேயே மலர்ந்த மலரெல்லாம் ஆட
மதுதன்னைச் சிந்தும் மலரிதழாள் வந்தாய்
புதுவான்வெண் நிலவைப் போலவேநீ ரசித்தேன்
------காய் மா காய் மா கலிவிருத்தம் எதுகை மோனைப் பொலிவுடன்