மெல்லப் படருகிறாய் நினைவில்

முல்லைக்கு நெஞ்சத்தேர் தந்தேன்
நான் பாரியல்ல
மெல்லப் படருகிறாய் நினைவில்
மாலைத் தென்றல் போல்
தொல்லை தருகிறாய் இரவுக் கனவில் வந்து
ரோஜா பாதம் நெஞ்சில் பதிக்கிறாய்
எல்லையிலா நீல வானம் போல
என்னுளே விரிகிறாய்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jul-24, 9:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே