மாந்தோப்பு தான் அவளோட பூலோக வீடு
சோசியர் ஐயா, நேத்து இரவு எட்டு மணிக்கு என் மனைவி
எள்ளீஸ்வரிக்குப் பெண் குழந்தை பிறந்ததுங்க. அவள்
ராசிப்படி
அவள் வாழ்க்கை எப்படி அமையுங்க.கொஞ்சம் பாத்துச்
சொல்லுங்க ஐயா.
@@@@@@@@@@@
கொளுஞ்சியப்பா, உன் மனைவிக்குப் பிறந்த குழந்ததையின்
இராசிப்படி அவள் பிறந்த வீட்டிலும் வாழ முடியாது. திருமணம்
பண்ணிக் கொடுத்தா புகுந்த வீட்டிலும் வாழ முடியாது.
@@@@@@@@@@@@@@
ஐயா, என்னங்க ஐயா இப்பிடிச் சொல்லி அதிர்ச்சியைக்
கொடுக்கறீங்க?
@@@@@@
பேசாம நான் சொல்லறதைக் கேளு. அவள் இராசி என்ன
சொல்லுதோ அதைத் தான் நான் சொல்வேன். என்னோட
விருப்பு, வெறுப்பு இதில கிடையாது.
உனக்குப் பரம்பரைச் சொத்து ஏராளமா இருக்குது. அந்த
பதினைந்து ஏக்கர் மாந்தோப்பில் அவளுக்கு ஒரு வீடு கட்டு.
திருமணம் ஆகும் வரை தான் பிறந்த வீடு. அதுக்கப்பறம்
வாழ்நாள் முழுவதும் மாந்தோப்பு வீடு தான் அவள் வாழப்போற
வீடு. அதில வர்ற வருமானம் எல்லாம் அவளுக்கு அவள் கணவன்
மற்றும் வாரிசுகளுக்குத் தான் சொந்தம். வீட்டு
மாப்பிள்ளையாப் பார்த்து அவளுக்கு இருபத்தியோராவது
வயசில திருமணம் செய்து வை.
@@@@@@
அதெல்லாம் சரிங்க சோசியர் ஐயா. அவளுக்கு என்ன பேரு
வைக்கிறதுன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லீங்களே.
@@@@@@@@@@@
அவள் இராசிப்படி அவள் எங்க வாழ்வாள்னு சொன்னேன்?
@@@@@@@@@@@
எங்க பதினைந்து ஏக்கர் மாந்தோப்பு.
@@@@@@@@@@@@@
அவள் இராசிக்கான பேரு 'குஞ்சனா'. பொருத்தமான
இந்திப்பேரு.
@@@@@@@@@
அந்தப் பேருக்கு என்ன அர்த்தமுங்க?
@@@@@@@@@@@
"தோப்பில் மகிழ்ச்சியைக் கொண்டு வருபவள்".
@@@@@@@@@@@@
ஐயா, சோசியர் ஐயா, நீங்க கண் கண்ட தெய்வம் ஐயா.
@@@@@@@@@@@
என்னைப் புகழாதே கொளுஞ்சியப்பா. உன் பொண்ணோட
இராசி சொல்லற பேரு. நான் சொல்லல.
@@@@@@@@@@@@
சரிங்க ஐயா. இப்பவே மாந்தோப்பில எல்லா வசதியும் கொண்ட
வீடு ஒண்ணைக் கட்ட ஆரம்பிக்கணும்.
@@@@@@@@@@@@@
சரி, என் கட்டணத்தை எடுத்து வச்சுட்டுப் போயிட்டு வா.
@@@@@@@@@@
இந்தாங்க ஐயா.
@@@@@@@@@@@@@@
Kunjana = One who brings joy in the grove