என் பையன்களை கெடுத்துட்டேனே
என் பையன்களை நானே கெடுத்துட்டேனே!
நான் அவுங்களுக்குத் தமிழ்ப் பேருங்களை
வச்சா மருகாதி இருக்காதுன்னு என்ற
குடிகார நண்பன் ஒருத்தன் பேச்சைக்
கேட்டு அவஞ் சொன்ன பேருங்களை
வச்சேன்.
@@@@@
என்னய்யா ஆச்சு?
@@@@@@@
அவன் என்ற பையன்களுக்கு 'சோமா,
சூரா'--ன்னு பேரு வைக்கச் சொன்னான்.
நானும் அந்தப் பேருங்களை என்ற
இரட்டைப் பசங்களுக்கு வச்சிட்டேன்.
அவனுக படிச்சுப் பட்டம் வாங்கியும்
பிரயோசனம் இல்லை.
@@@@@@@
ஏன்? என்ன ஆச்சு?
@@@@@@@
டாசுமாக்கே கதின்னு கெடக்கரானுக.
@@@@@@@
அது அவுங்களோட பெயர் இராசி.
@@@@@@
பெயர் இராசியா?
@@@@@@@
ஆமய்யா. சோமா, சூரா அதிகாலத்தில்
மக்கள் குடிச்ச மதுவோட பேருங்க ஐயா.
அவுங்க குடிக்காம என்ன செய்வாங்க?
@@@@@@@@
ஐயோ கடவுளே! என்ற பசங்களை எப்படித்
திருத்துவேன்.
@@@@@@@@@@
குடிகாரங்களை மதுப்பிரியர்கள்னு தான்
சொல்லணும். அவுங்களைத் திருத்த
அரசாங்கமே ஒரு அமைப்பை நடத்துதாம்.
அங்க அவுனுகளைச் சேர்த்துவிட்டா மூணு
மாசத்தில் திருந்தி வருவாங்க.
@@@@@@
அப்பிடியா. ரொம்ப நன்றி ஐயா.