ஒருவன் கணனடங்கக் கற்றானும் இல் - சிறுபஞ்ச மூலம் 30

நேரிசை வெண்பா

ஒருவ னறிவானு மெல்லாம்யா தொன்று
மொருவ னறியா தவனும் - ஒருவன்
குணனடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்
கணனடங்கக் கற்றானும் இல் 30

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

எல்லாவற்றையும் அறிவான் ஒருவனும், யாதொன்றையும் அறியாதான் ஒருவனும், நற்குண முழுதும் இல்லாதவனாகிய ஒருவனும், குற்றம் முழுதும் இல்லாதான் ஒருவனும், நூற்றொகுதி முழுதுங் கற்றான் ஒருவனும் இவ்வுலகத்தில் இல்லை!

கருத்துரை: எல்லாவற்றையும், எதுமறியாதவனும் நல்லியல்பே யில்லாதவனும், குற்றமே யில்லாதவனும், எல்லாக் கல்விகளையுங் கற்றவனும் இவ்வுலகில் இல்லை.

இச்செய்யுளால் மக்களில் ஒருவரை யொருவர் இழித்துரைக்கும் இழிகுணம் கூடாதென்பதும், எவரும் தற்பெருமை கொள்ளுதல் கூடாதென்பதும், உணரப்படும்;

'குணனடங்கக் குற்ற முளானும்' எனவும் பாடம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-25, 9:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே