தமிழ்மொழியில் பிறமொழி கலப்பு ஏன் கவிஞர் இரா இரவி
தமிழ்மொழியில் பிறமொழி கலப்பு ஏன்?
கவிஞர் இரா. இரவி
*****
உலகின் முதல்மொழிக்கு பிறமொழி எதற்கு?
உன்னத மொழியில் பிறமொழி கலப்பு ஏன்?
உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும்!
ஒப்பற்ற மொழியில் கலப்படம் மொழிக்கு கேடு தரும்!
இல்லாதவன் பிச்சை எடுப்பது தவறில்லை
இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?
தமிழில் சொற்கள் களஞ்சியமாக உள்ளன
தன்னிகரிற்ற தனிப்பெரும் செம்மொழி தமிழ்!
ஆங்கிலேயர் யாராவது உலகில் எங்கேனும்
ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசுவார்களா?
தமிழன் தான் தமிழோடு ஆங்கிலம் கலந்து
தமிங்கிலம் பேசி தமிழ்க்கொலை புரிகின்றான்!
ஆங்கிலத்தில் கையொப்பமிடுவதை உடன் நிறுத்திடுக!
அழகுதமிழில் கையொப்பமிட உடன் பழகிடுக!
இருமொழியில் கையொப்பம் வேண்டாமே! !
ஒருமொழியில் தமிழில் போட்டுப் பழகிடுக
வடமொழி எழுத்துக்கள் தமிழுக்கு எதற்கு?
வடமொழி எழுத்துக்கலப்பு தமிழுக்குக் கேடுதான்!
அனைத்து மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
அதனை கலப்படம் செய்து களங்கப்படுத்தலாமா?
தமிழில் எழுத்துக்கு பஞ்சமே இல்லை
தமிழுக்கு பிறமொழி எழுத்து எதற்கு?
நல்லதமிழில் நாளும் எழுதிடுவோம்
நல்லதமிழில் நாளும் பேசிடுவோம்!