தமிழ் கண்ணீர்
எம் தமிழரின் கண்ணீரை பார்த்தால்
நீ உண்ணும் சோறு கூட
உனக்கு கசப்பாக தான் தெரியும்
தமிழ் கோ மக்கள் ஆண்ட
இந்த மண்ணில் இன்று
சவக்குழிக்கு கூட
இடம் இல்லை
அவைகளில் புகழ் பெற்று
விளங்கிய எம் தமிழ் அறிவாளர்கள்
இன்று மண்ணில் புதைக்கப்படும்
அடையாளம் இல்லாமலும்
மூலையில் கிடத்தப்பட்டுள்ளர்கள்
கிழிந்த ஓலை பாயை போல்
பனை வளத்திற்கு புகழ்
பூத்த எம் ஈழ மண் - இன்று
பிணக்குவியலுக்கு புகழ்
பூத்து இருக்கின்றது
தமிழ் தேசத்தில் அகதிகளாக
அடைக்கலம் தேடி வந்தவர்கள் - இன்று
ஆள் புலன்களுக்கு பெரும் மிகப்பெரும்
சொந்தக்காரர்கள்
உரித்துடயவனோ
ஓட்டை கூடாரத்தில்......
இவன் விடும் கண்ணீர் இன்று
ஒரு வரலாற்று காவியம் .....