உனக்கு பிடிக்கும் என்பதால்......
தனிமையில் இருக்கையில்
உன்னுடன் பேச
வார்த்தைகளால் கவி பாடும் நான்
உன் முன்னால் தோன்றையில்
பேச வார்த்தை இன்றி ஊமையாகின்றேன்
என் உதடுகள் பேசும் வார்த்தைகளை விட
என் மௌனம்
உனக்கு பிடிக்கும் என்பதால்
என் கவிதைகள் பேசும் வார்த்தைகளை விட
என் விழிகள் பேசும் கவிதை
உனக்கு பிடிக்கும் என்பதால்