வெளிநாட்டு வேதனை...



பிள்ளை பேரு கடன் என்பது...

பெற்றோக்கு நாம் ஆற்றும் கடைசி ....

மரியாதை....

தாயின் முகமும்... தந்தை முகமும்....

இறுதி சடங்கினில் கூட பாரா...

முகங்கள்....

எத்தனையோ மகன்களிடம்....

பொருளாதாரம் புனைய...

வாழ்வாதாரம் தொலைத்து... அடிமை வாழ்வா..

அயல்நாட்டு வாழ்வு.... இவர்தான் உன் தந்தை என?

அவன் சிசுவிடம் அடையாளம் காட்ட ... அவன் மனைவியும்...

திருடனை கொட்டிய தேளாய்...

விழி பிதுங்கும்... அவன் பாசம்...

பயன்படுமா அவன் வாழ்வில்...

தொலைந்த கனவுகளும்.... தொலையாத நினைவுகளுமே...

பொருளாதார தேடலின்... வியர்வை துளிகளில்...

மிச்சமென வியர்வை வாடையாய்,......

எழுதியவர் : காளிதாசன்... (5-Dec-11, 4:19 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 229

மேலே