என்னைத் தந்தேன்… ஏமாந்து நின்றேன்!
அன்று-
வேட்பாளராய் என் மனமெனும்
ஓட்டு கேட்டு வந்தாய்
வாக்காளனாய்,
நானும் என்னையே தந்தேன்!
இன்று-
லஞ்சம் எனும் செல்வந்தனோடு நீ
வாக்களித்த ஏமாளிகளில்
ஒருவனாக நான்!
ஜனநாயகமும் காதலும் ஒரு வழிப்பாதை…
‘வாங்குவது’ மட்டும்தான் இங்கு வாடிக்கை !