நாராயணா எனும் நாமம்

அறுந்த பல்லிவால் போல்
இல்லை இல்லை என்று
துள்ளித் திரிவதில்
அறிவிலி மானிடனே
என்ன லாபம்

தூணைப் பிளந்து அரக்கன்
மார்பை பிளந்தவன் -உன்
ஊனை பிளந்திட ஒவ்வொரு முறையும்
அவதாரம் எடுத்து வரமாட்டான்
ஆதலினால் உணர்ந்து ஓதிடுவாய்
நாராயணா எனும் நாமம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-12, 8:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 302

மேலே