காற்றினிலே . . .
மீட்டாத வீணையில்
சேராத சுருதி ஒன்று
தனித்து கிடக்கின்றது . . .
நட்பென்ற நரம்பில்
எழும் ஜீவ நாதம்
அலைந்து கிடக்கின்றது . . .
என்றேனும் இளகும்
மனதிற்காய் தனித்து
மீட்டிக் கொண்டிருக்கிறது
இந்த வீணை . . .
சற்றே உற்று கேளுங்கள்
அந்த காற்றினிலே
கரைந்திருக்கும் ஏன் நினைவுகளை .. . . . !