honeywing - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  honeywing
இடம்:  salem
பிறந்த தேதி :  30-Nov-1979
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Dec-2011
பார்த்தவர்கள்:  226
புள்ளி:  103

என்னைப் பற்றி...

I am interest with reading books and poems

என் படைப்புகள்
honeywing செய்திகள்
honeywing - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Feb-2016 4:59 pm

படபடக்கும் பட்டாம் பூச்சியாய்
சிலுசிலுக்கும் சிற்றோடையாய்
திகட்டாத விளையாட்டுடன்
சின்னஞ் சிறுமியாய்
சுற்றி திரிந்தேன்

கடந்து போனது காலம் ...

அரும்புகள் மொட்டவிழ
ஆசை கனவுகள் ஆயிரம்
அடிமனதில் கொட்டமிட
விடலை பருவத்தில்
ரகசிய சிரிப்போடு
உலா வந்தேன்....

கடந்து போனது காலம் ...

நட்பை தவிர வேறொன்றும் அறியாமல்
நட்பெனும் ஆணிவேரை
கிடைத்த இடமெல்லாம்
வேர் ஊன்றி
ஆலமரமாய் விழுதுகளோடு
விண்ணுயர நின்றிருந்தேன்...

கடந்து போனது காலம் ...

இன்று
சூழல் எனும் சிறையில்
மூச்சுவிடக் கூட தனிமையின்றி
என் வேர்கள் எல்லாம்
புரையோடி போயின
விழுதுகள் மட்டுமே என்னுள்
மனம்

மேலும்

நட்பின் சுவாசத்துக்கு எல்லையே இல்லை அகிலம் எனும் பந்தும் நட்பின் காற்றால் தான் சுழல்கிறது 01-Mar-2016 12:14 am
honeywing - honeywing அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2016 4:17 pm

பிறை கீற்றாய் உன்
நெற்றியில் ஓர்நாள்
பார்த்தேன் சந்தனத்தை ....

மணம் வீசியதோடு
என் மனதையும்
கொள்ளை கொண்டது ....

அன்றிலிருந்து இன்று வரை
சந்தனம் என்று
சொன்னாலும் , பார்த்தாலும்
அதில் உன் நினைவு தான்
குளிர்ச்சியாய், புன்சிரிப்பாய்
என்னுள்
மணந்து கொண்டே இருக்கிறது .....

மேலும்

honeywing - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2016 4:32 pm

நட்பை மீட்டெடுக்க
எத்தனையோ வழிகள்...

சிரமம் வேண்டாம்
ஒரு புன்னகையும்
ஒரு ' ஹாய் ' போதும் ...

எங்கோ ஆழத்தில்
புதைந்து கிடந்தாலும்
காற்றடைத்த பந்து போல்
நெஞ்சு கூட்டை மீறி
வந்து விடும்....

காலச்சூழலில்
கரைந்து போய் விட்ட
மனதை கேட்டால் தெரியும்
அது வெளிவரத்தவிக்கும்
சிசுவின் வேதனையோடு
தாயின் வேதனையையும்
சேர்த்தே அனுபவித்து கொண்டு கிடப்பது...

மலர்ந்தால் மணக்கும் மலரல்ல நட்பு...
இன்னும்
மலராத மொட்டு போல்,
விடியாத இரவு போல்,
சுவைக்காத தேனைப் போல்,
இறுக்க கட்டி வைத்தாலும்
இன்னும் வேர் விட்டு
கிளைத்து கொண்டு தான் இருக்கும்
நெஞ்சில்...

மேலும்

honeywing - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2016 4:17 pm

பிறை கீற்றாய் உன்
நெற்றியில் ஓர்நாள்
பார்த்தேன் சந்தனத்தை ....

மணம் வீசியதோடு
என் மனதையும்
கொள்ளை கொண்டது ....

அன்றிலிருந்து இன்று வரை
சந்தனம் என்று
சொன்னாலும் , பார்த்தாலும்
அதில் உன் நினைவு தான்
குளிர்ச்சியாய், புன்சிரிப்பாய்
என்னுள்
மணந்து கொண்டே இருக்கிறது .....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே