மணம் வீசுதே

பிறை கீற்றாய் உன்
நெற்றியில் ஓர்நாள்
பார்த்தேன் சந்தனத்தை ....

மணம் வீசியதோடு
என் மனதையும்
கொள்ளை கொண்டது ....

அன்றிலிருந்து இன்று வரை
சந்தனம் என்று
சொன்னாலும் , பார்த்தாலும்
அதில் உன் நினைவு தான்
குளிர்ச்சியாய், புன்சிரிப்பாய்
என்னுள்
மணந்து கொண்டே இருக்கிறது .....

எழுதியவர் : (11-Feb-16, 4:17 pm)
சேர்த்தது : honeywing
பார்வை : 58

மேலே