ராமனைத் தேடி ! (இலங்கைப் படுகொலை பற்றி )
பிறப்பின் பொருளே சாபாமாய்ப் போக
நிஜங்கள் எல்லாம் நிழல்கள் ஆக,
சதைகள் எல்லாம் விதைகள் ஆக,
பச்சை வயலில் சிவப்புச் சாயங்கள்
கடற்கரை மணலில் ஆறாத காயங்கள் !
தோட்டாக்கள் புகைத்த உடல்கள் கொஞ்சம்
கண்ணீர் புதைத்த உயிர்கள் கொஞ்சமென
அரை குறை மனிதர்களாய்
தூக்கம் தொலைத்த கண்களோடு
துக்கம் வரைந்த பாதங்களோடும்
ராமன் நடந்த பாதைகள் தேடி ,
விடியலை நோக்கி நில்லாமல் பயணிக்கிறோம்
அதோ , தூரத்து மின்னலில் சிறு துளி வெளிச்சம் !
-தீபு !