சிரிக்கும் சிலையாய்
வளை ஓசையுடன்
கொலுசு ஒலியும்
இணைந்து ஒலிக்க
அசைந்து வந்தது
ஒரு தாவணித் தென்றல்
ஆலயத்தின் முன்பு
திரும்பிப் பார்த்தேன்
சித்திரையில் வந்த
மார்கழிப் பனியாய்
சிரிக்கும் சிலையாய்
நின்றாள் அவள்
---கவின் சாரலன்

