"ஒய் திஸ் கொலைவெறி"kavipriyan
திட்டம் தீட்டி
உள்ளத்தில்
உருவெடுத்த
ஒருவன்
உள்ளிருந்து
ஏவுகின்ற
ஏவலால்
பொழுதுபோக்கு
என்ற பெயரால்
கன்னியர்களை
காதல் எனும்
வலையில் வீழ்த்தி
அணு அணுவாய்
கொள்ள துடிக்கிறார்களே
ஏன் இந்த கொலைவெறி....
படிப்பு படிப்பு
என்று
பயம் ஊட்டும்
பெற்றோர் மீது
வாராத கோபம்
கற்பிக்கும் ஆசிரியர்
மீது வர காரணம் என்ன
படிக்க சொன்னது
குற்றமா
அல்லது
பயில வைப்பது
குற்றமா
குத்தி கொல்லும்
அளவிற்கு கோபம்
9 ஆம் வகுப்பு
மாணவனுக்கு
ஏன் இந்த கொலைவெறி....
கட்சிவிட்டு
கட்சி மாறுவது தவறா
மதம்விட்டு
மதம் மாறுவது தவறா
சாதிவிட்டு
சாதி மாறுவது தவறா
கட்சிவிட்டு,மதம்விட்டு,சாதிவிட்டும்
மனம் ஒற்றுபோனவர்களுக்கு
கொலைதான் தண்டணைய
ஏன் இந்த கொலைவெறி....
இது போன்றவற்றை
என்னும் போதெல்லாம்
கவிதையை
சொற்களால்
கொல்லதுடிக்கிறேன்
எனக்கு
ஏன் இந்த கொலைவெறி....
தொடரும்
ஏன் கொலைவெறி....!
by
kavipriyan