பேருந்தில்...

அடித்துபிடித்து பேருந்தில் ஏறி
நீ பார்ப்பது போல் அமர்ந்தேன்...
ஒரு முனையில் நீ...
மறுமுனையில் நான் ....
இடைவெளி அதிகம் என்றாலும்
இணைந்து இருந்த நம் கண்கள்...!
தீமுட்டும் உன் விழியின்
சீண்டல்களும்....
உன்னை கடக்கும் போது
உரசி செல்லும் வெப்ப காற்றாலும்
சீலிர்க்கிறேன்...
ஒரு முறை பேசுவாய் என தினமும்
வருகிறேன் அப்பேருந்தில் ...