அவளின் சைகை
சிரித்தாள்
நானும் சிரித்தேன்,
முறைத்தாள்
பதிலுக்கு நானும்,
தூது அனுப்பினால்
காற்றினில் இதழ்களை,
கையினில் பிடித்து திரும்பினேன்
பின்னால்...,
அவள் சைகைகளுக்கு சொந்தக்காரன்....
சிரித்தேன்,
அவளை நினைத்தல்ல
என்னை நினைத்து...!