தோசை..

கருங்கல் பறையில்வரைந்த வெள்ளை ஓவியம்..
அன்னையர்கள் வார்த்தெடுக்கும் குட்டி காவியம்..
நீ இட்டபின் வெண்ணிலா...
சுட்டபின் நீ செந்நிலா....அதிகமாய்
சுட்டால் ஆவாய் நீ கருநிலா..

நெளிகின்ற அப்பலமே.. கணவன்களுக்கு
வழங்கப்படும் காலைநேர சம்பளமே..
உன்னை ருசிப்பார்கள் முறுகலாய்..நீ என்ன
முருங்கக்காய் உருண்டோடும் வட்டவடிவ சருகளா..
நாடெல்லாம் உனக்கு சிறப்பு...நாளெல்லாம் வாழ்ந்தபடி எம்மக்கள் வயிறை நீ நிரப்பு..

எழுதியவர் : (24-Apr-12, 11:27 am)
சேர்த்தது : nanyaar
பார்வை : 828

மேலே