வெறுங்கூடு வேகுது

ஆற்றுக்கரையிலே
சேற்றுப்பானை,
சேற்றுக்கரையிலே
சோற்றுப்பானை,
செத்தவன் கூட்டிலே
வேகுது
வெற்றுப்பானை,
சிவப்பு ரத்தமெல்லாம்
சிவக்குது
வெந்த பானையிலே,
வெந்த பானையிலே
வேகாத பேய்கள்
கொதிக்குது,
கொதிக்கும் வேகத்தில்
வேகமில்லாத ஆவிகள்
வெட்கப்பட்டு
வெளியேறும்
வேதனைப்பேய்கள்!....
எரிந்து முடிந்த
போதுதான்
எழுந்து போகிறதோ
வேதனை!!!...

எழுதியவர் : நாகராஜா (6-May-12, 9:06 pm)
பார்வை : 293

மேலே