நானுனக்கு பிள்ளையாய் ...பிறக்கவேண்டும் ..!

சகோதரியே ...!

எனக்குள்ளும் இன்று மனிதம் வாழ்கிறது என்றால் ..
அது நீதான் ....
ஆம் உன்னால்தான் நான் நானாக ....
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன் ...!
எனக்கு நீயல்லாமல் போயிருந்தால் .....
நான் ஆறடி நிலம் தேடி போயிருப்பேன் ...?!
என் கனவுகளுக்கு... கலகலப்பூட்டியவள் நீ....
என் கண்ணீருக்கு...கதகதப்பூட்டியவள் நீ ...!
நான் அனாதையை அழுதபோது ...
அன்னையாய் எனை அரவணைத்தவளும் நீதான் ..
நான் அறிவிழந்து தவறிழைத்த போது...
சகோதரியாய் ...செல்லமாய் ...
அதட்டி எனை திருத்தியவளும் நீதான்....!
நேசம் ..பாசம் ...அன்பு ...காதல் ..வாழ்க்கை ..
இத்தனைக்கும் அர்த்தங்களை ....
அன்போடு அறிவுக்கும் ..மனசுக்கும்
சொல்லிக்கொடுத்தவளும் நீ நீயேதான்...!
சுற்றயுள்ள சொந்தங்களின் சூழ்ச்சிகளை
புரிந்துகொண்டதும் உன்னால்தான் ....!
என்னை சுற்றிவந்த ...துன்பங்களை
தூக்கி எறிந்ததும் உன்னால்தான் ...!
என் உணர்வுகளுக்கு ...உயிரூட்டியவள் நீதான் ....
என் உரிமைகளுக்கு ..உரம் போட்டவளும் நீதான் ..!
எந்தன் இதயத்தில் பூத்த சந்தோஷ மலர் ...
இன்னமும் பட்டுவிடாமல் பூத்திருக்கிறதென்றால்..
எனக்காக அழ ...சிரிக்க ...நீயிருக்கிறாய் என்ற
இருமாற்ப்பில்தான்...!!!!
சகோதரியே ..இந்த ஜென்மம் ..இப்படியே போகட்டும்
அடுத்த ஜென்மத்திலாவது ...
நீஎனக்கு அன்னையாய் .....
நானுனக்கு பிள்ளையாய் ...பிறக்கவேண்டும் ..!

எழுதியவர் : இரா.அருண்குமார் (30-May-12, 6:07 pm)
பார்வை : 329

மேலே