உயிர்

சுருங்கி விரியும் இதயம் நிற்பின்
உடலின் உயிர் உறைந்து போகுமே;

இயற்கையின் ஆதிக்கம் புவியில் இருப்பினும்
இவ்வுயிரை காப்பதில் கவனம் வேண்டுமே;

கடுகளவு கவனக்குறைவால் உன்னுயிர் பிரிந்தாலும்
கவலையில் கதறுவது உன் குடும்பமே;

உயிரின் வேர் உன் இதயத்தில் இருப்பினும்
அவ்வேர் படர்ந்ததென்னவோ பலரின் இதயத்தில்;

ஒரு வேர் தான் அறுப்பினும்
அதன் பாதிப்பென்னவோ பல வேர்களில்;

அன்பினால் நீ அணைத்த இதயங்கள்
உன் அரவணைப்புக்காக தினம்தினம் இறக்குமே;

தினம் நீ பழகிய இடங்கள்
பார்க்கும் போது பாடாய் படுத்துமே;

கைப்பிடி அளவே இதயம் இயங்கினாலும்
அது கட்டிபோட்டதென்னவோ பலரின் பாசத்தை;

எது எதற்கோ கொடுக்கும் மதிப்பைவிட
உயிருக்கு ஒருபடி அதிகமாகத்தான் கொடுப்பாயே!

உயிரின் மதிப்பை இதயத்தில் ஏந்தி
கவனத்துடன் தான் உன்வாழ்க்கை வெல்வாயே!!

எழுதியவர் : Baveethra (30-May-12, 5:15 pm)
பார்வை : 223

மேலே