உருட்டும் விழிகளால் எனை மிரட்டும் அழகே ..!

உருட்டும் விழிகளால் எனை மிரட்டும் அழகே ..!
சிரிக்கும் இதழ்களால் எனை சிதைத்த திமிரே ..!
சேலைகட்டி வந்து ..என் மனதை ...
சிறு சிறு சில்லுகளாய் சிதறடிக்கிறாய் ...!
பாவாடை தாவணியில் ...
என் பருவத்தையே பந்தாடுகிறாய் ...!
பாழாய் போன என் மனம் ...
நீ செல்லமாய்
போடா என்றாலும்,வாடா என்றாலும்..
பொய் கோபம் கொண்டாலும் ...
போதையில் சிரிக்கிறது ....!
இமைகளை படபடவென அடிக்காதே ...
என்னிதயம் எக்குதப்பாய் துடிக்கிறது ..!
புருவத்தை வில்லாய் வளைக்காதே ...
உன் காதல் எனை அம்பாய் துளைக்கிறது ..!
நீ விநோதமானவள் ....
உன்னைக்கண்டதும் என்னுள் ...
ஓராயிரம்கோடி மின்னல்கள் ...!
வெளிச்சம் மட்டும் உன் விழிகளுக்குள் ...!
நீ சாகசக்காரி ....வலியே இல்லாமல் ..
என்னிதயத்தை திருடி சென்றுவிட்டாயயடி..!
நீ மோசக்காரி ....பிரம்மனும் உனைக்கண்டால்
மோகித்து மோகனம் இசைப்பான் ...!
ராமனும் உனைக்கண்டால் ..
ஒருக்கனம் தன்னை மறந்து ரசிப்பான் ..!
ரவிவர்மனும் ..வரைவதை மறந்து ...
உன்னை கவி உரைப்பான் ...!
உருட்டும் விழிகளால் எனை மிரட்டும் அழகே ..!

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (6-Jun-12, 6:27 pm)
பார்வை : 324

மேலே