கடவுளின் கரிசனம்......
தனிமையில்
சிக்கித் தவித்த
என்னைக் கண்டு
கடவுளுக்குக் கரிசனம்
வந்து விட்டதோ.....?
என் அறையின்
முன்னுள்ள மரத்தில்
இணைக் காக்கை தன்
இளம் குஞ்சுடன்
குடியேறியுள்ளது
இப்பொழுது நானும்
வசித்து வருகிறேன்
ஒரு குடும்பத்துடன் ..........
-பாரதிகண்ணம்மா

