034 - 'ரவைகள்' கொடுப்போம்!
'இந்தக் கிண்ணத்தில்
மலர்களையாவது வைப்போம்
அரிசிதான் இல்லையே!'
என்றாராம் ஒருகவிஞர்!
இன்றைய நிலைமையை
யோசித்துப் பார்த்தேன் ..
இந்தக் கரங்களுக்கு
அரிசியைத்தான்
கொடுக்க முடியவில்லை,
கொஞ்சம்
'ரவைகளை'யாவது கொடுப்போமே!
என்றுதான்
எழுதத் தோன்றுகிறது!
-௦-