வரவை காத்து ஒரு நிலம்

யார் வரவுக்காக காத்திருக்கிறாய்
உன் கற்பினை விழுங்கியவர்களை இனம் காட்டவா
யாரோ ஒருவர் வருவார் எனநம்பும் உன் கண்களில்
நீர் வடிந்து நீறு போர்த்த
வெப்ப நிலம் போல் பல கதைகள்
உன் இளமை பறிபோய் விட்டது இருளை கிழிக்க வேண்டிய உன் கரங்கள்
இரக்கப்பட யாருமில்லையா என கேட்க வேண்டாமே
கடலலை கரைமணலை
விழுங்குவது போல
இருள் ஒளியை விழுங்குவது போல
உன்னை விழுங்கியது சூழ்ச்சி

உன் அழகாய் களவாடிவிட்டார்கள்
உன் மைந்தர்களுக்கு முன்னால்
இவளவு திசைகளிலிருந்தும் உனக்காக குரல் கொடுக்காத மனிதம்
வீழ்பவர்களை ஏந்தாது வீழ்த்துபவர்களைத்தான் ஏந்தும்
பார் பார் என்கிறாயே பாரே உனக்கு பழி செய்யும் பாதங்கள் பறந்து கிடக்கிறதே கொத்து கொத்தாய் போட்ட முற்றுப்புள்ளிகள் போல

உனைமட்டும் ஆச்சரியக்குறி ஆக்கிவிட்டது உலகம்

எழுதியவர் : கிருஷ்ணா (11-Sep-12, 3:46 pm)
சேர்த்தது : mannan
பார்வை : 175

மேலே