விழிகளின் விதை
உனக்கு பின் யாரோ
உலகை காண்பாரோ ?
கருவறையில் வாங்கிய
வரம் ஒன்றை
கல்லறையில் வழங்க
முன் வருவோம்
தெருவோடு போகும்
மழை நிராய்...........
வீணாக்காமல் .........
வரம் வழங்கி -மீண்டும்
உயிர் பெறுவோம் ........
உருபெருகும் நாட்டின்
கருப்பு பணமாய்
புதைக்காமல் ............
விழிகளின் விதை வழங்கி - பிறர்
கண்மலர வழி செய்வோம்