எங்கள் மதுரை !
வாயில் கள்
பல உண்டு !
வந்தாரை வரவேற்கும்
எங்கள்
சந்தனத்தமிழ் காற்று!
வந்தா ருக்கு வாழ்வளிக்கும்
தமிழ் நாடு !
பசியில் நொந்தாருக்கும்
உணவளிக்கும்
எங்கள் ஊரு !
சரி ..............!
சுடச்சுட பால் கிடைக்கும்
சுடச்சுட தேன் கிடைக்குமா ?
எங்கள் ஊருக்கு வந்து பாருங்கள்
இட்லி கூடஇனிக்கும் !
கரும்பு சாருக்கு
மயங்கி போய்
மது கூட மனிப்பு கேட்கும் !
கடம்ப மர
காற்று
கட்டுடம்பிலும் கவி
பாடும்.பூவுக்குள்
நுழைந்து
புன்னைகை புரியும் !
எப்போது
எங்காவது ,,
பாவாடை தாவணியை
பார்க்க முடியுமா ?
எங்கள் ஊருக்கு
வாருங்கள்
தவறாமல் காணலாம் ,
ஆனால்
தப்பி தவறி கூட
தவறாய்
பேசிவிடாதீர்கள் !
அருவாள் பறக்கும்
அலுக்காமல் கொலைக் கூட
நடக்கும் !
நான்கு வேதங்களாய்
நாற்புற கோபுரங்கள்
நடுவில்
மௌனமாய் புன்னகைப்பாள் ,
பார்க்க வந்தாலோ
பரவசம் அடையும் அளவிற்கு
பக்தியில் திகைக்க
வைப்பாள் ,
எங்கள் அங்கம் எல்லாம்
ஆளும் அரசாட்சி
உங்கள் உயிர்க்குள் ஊடுருவி
உண்மையாய் உட்காந்திருப் பாள்
அந்த மீனாக்ஷி !
கடவுளைக் காணவேண்டுமா?
காதலைக் காண வேண்டுமா ?
வாருங்கள் !
எங்கள் கள்ளழகர்
குடி இருக்கும்
அழகான அழகர் கோவிலை !
எங்கள் மதுரை
படை வீட்டின் படிக்கட்டில்
பக்குவமாய்
ஏறிநிற்கும்!
பழமுதிர் சோலையாய்
பார் எங்கும்
பாரெங்கும் பேர் எடுக்கும் !
மதம் என்னும் போர்வை
தேவை இல்லை !
சாதி என்னும் சடங்கு
தேவை இல்லை !
நல்ல மனம் இருந்தால் போதும்
எங்கள் மதுரை உங்கள்
கால்அடியில்
மண்டி இட்டு கிடக்கும் ...................!
எல்லா ஊரிலும்
தாமரை தானே பூக்கும் !
ஆனால்
எங்கள் ஊரிலோ
பொற்றாமரை பூக்கும் ,
அதற்கு வேர்
எது தெரிமா???
புலவர்களின் படைப்பு
தமிழ் அன்னை இன் பூரிப்பு .....................!
அழகு தமிழ்
கற்க வேண்டுமா ?
பைந்தமிழைப் பேச
வேண்டுமா ?
ஒரு நிமிடம் கூட
யோசிக்காமல் ஓடிவாருங்கள் !
எங்கள்
தமிழ்ச்சங்கத்தைத் தேடி
நாடி வாருங்கள் ...............!
சிலப்பதிகாரம் முதல்
சினிமா வரை
எங்கள் ஊரு !
தமிழை வளர்ப்பதில்
அன்று முதல் இன்று வரை
எங்களை மிஞ்ச
வேறு யாரு ???????????????????