கணிப்பொறித் தமிழன்

இரவைக் கொன்று
பகலில் தூங்கும்
வௌவால் வாழ்க்கை!

கடிகாரம் பின்நோக்கி சுழல
தூக்கத்தை விற்கிறேன்
வெளிநாட்டிடம்!

நிலவை ரசித்து
ஆற்றுமணலில் விளையாடி

மாடு மேய்த்து
விறகுவெட்டி வீடு சேர்த்த
நான்

இன்று
பிச்சா வரவழைத்து
கோக்குடன் உண்டுகளிக்கிறேன்!

உழவன் உணவின்றித் தவிக்கையில்!
மீனவன் கடலில் செத்து மிதக்கையில்!

கணிப்பொறித் தமிழன்
நான்!

எழுதியவர் : சரவணா (10-Nov-12, 2:02 am)
சேர்த்தது : ksk2020k
பார்வை : 122

மேலே