பிறந்தேன் மறுபடியும்

உனது அந்தரங்கத்தின்
அனுமதியற்ற
எல்லையை
ஒரு நாள் தற்செயலாக
நான்
மீறிவிட்ட
கோபத்தில்
ஏறக்குறைய
நாற்பது நாள்கள்
என்னோடு நீ
பேசாமல்
இருந்தாய்
ஓர் அதிகாலையில்
முதலாவதாக எழுப்பி
எனக்கு நீ
பிறந்தநாள் வாழ்த்துச்
சொல்லிய போதுதான்
பிறந்தேன் மறுபடியும்
புதிதாய்
நான்

எழுதியவர் : அறிவுமதி கவிதைகள் - நட்பு (9-Mar-10, 8:55 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 1505

மேலே