யார் குற்றம்

கருவிலே வளர்ந்த பிள்ளை தெருவிலே

மடியிலே தவழும் முல்லை மண்ணிலே

மதி கெட்டுப்போனதால் விதி செய்த விளையாட்டு

கழுத்தில் மாங்கல்யம் இல்லை
கையில் பிள்ளை

ஊர் பழிக்கு அஞ்சி வீதியில் விட்டு எறிந்தால்

என்ன பாவம் செய்தது அந்த மழலை

உன் சுகத்திற்காக தன்னிலை மறந்தாய்

கருவிலே சுமந்தாய் பிறந்தவுடன்
தெருவிலே விட்டு எறிந்தாய்

தெரு நாய்கள் கடித்து குதறவா

நீயும் ஒரு பெண்ணா

கருவில் கலைத்து இருந்தால்
சுவடுகள் தெரியாமல் போயிருக்கும்

வையம் போற்ற வாழ பிறந்த மழலையின்
வாழ்வை நாசமாக்கி விட்டாய்

கற்பகத்தில் கொண்டு சேர்த்திருந்தால்
ஆனதை என்ற பெயருடன் வளர்ந்து இருக்கும்

நீ குழந்தையின் உயிரை குடித்து விட்டாய்

இது யார் குற்றம் உன்னை இந்நிலைக்கு
ஆளாக்கிய கயவன் குற்றமா

இல்லை

தன்னிலை மறந்த பெண்ணே உன் குற்றமா

நீ இருந்து என்ன பயன்


கோவை உதயன்

எழுதியவர் : (19-Nov-12, 4:42 pm)
சேர்த்தது : UDAYAKUMAR.v
Tanglish : yaar kutram
பார்வை : 153

மேலே