ஒருவேளை கிடைத்துவிட்டால்

வானில் உலா வரும்
அழகிய தேவதைக்கு ....
அன்னம் போல் உடை உடுத்தி ..
அனுப்பிவிட்டவர் எவரோ ..???
அவரை தான் உலா வரும்போதெல்லாம்
அவளும் தேடுகிறாளோ....???
ஒருவேளை கிடைத்துவிட்டால் ...
வராமல் அவனிடமே
இருந்தாலும் இருந்துவிடுவாள் என்று ...
இங்கே ஒரு ரசிகை புலம்புகிறாள் ...
அவளின் வெண்ணிற காட்சியை ரசித்து ...