ஊசி
யாரோடும்
எதோடும்
ஒப்பிட முடியாதது
குழந்தையின் ஸ்பரிசம்
மட்டுமல்ல
ஊசியும் தான் !
தலை வலி முதல்
தலைவிதி வரை
தீர்மானிக்கும்
சக்தி
ஊசிக்கு உண்டு !
பிறப்பின் முதல் துளிக்கும்
இறப்பின் இறுதி மூச்சிற்கும்
ஊசிக்கும்
நிறைய சம்மந்தம் உண்டு !
மக்களின் மனோ மந்திரி
ஊசிதான் !
கடவுளை விட
காய்சல் வந்தால்
ஊசி மீதுதான்
நிறைய நம்பிக்கை
மக்களுக்கு !
ஊசியின் மகத்துவம்
தெரியுமா ?
உங்களுக்கு ?
உங்கள் உடம்பில்
ஒரு முறையாவது
ஊசி உரசிவிட்டுப் போனால் தான்
உங்களால்
உலகில் உருப்படியாய்
வாழ முடியும் !
ஊசியால்
ஆக்கவும்முடியும்
அழிக்கவும்முடியும் !
இவன் சாதரணமானவன்
அல்ல
உங்கள் ரத்தத்தில்
புகுந்து
ரசவதமாய் மாறுவான் !
நோய்கிருமிகளை
தேடிப்பிடித்து
மாங்குமாங்கு என
வெளுத்தெடுப்பான்!
உங்கள் பாஷையில்
சொல்ல வேண்டுமானால்
மருத்துவமனை -செல்போன்
டாக்டர் -சிம்கார்ட்
ஊசிதான் -மெயின் பாலன்ஸ்.
பாலன்ஸ் இல்லாமல்
பேச முடியாது !
ஊசி இல்லா
மருத்துவமனை
ஊறுகாவிற்கு கூட
உதவாது !
உயிரை கொடுப்பதிலும்
சரி
உயிரை எடுப்பதிலும்
கடவுளுக்கு நிகர்
இந்த உலகில் ஊசி மட்டும் தான் !
நீயார் !
உனக்குள் என்ன ?
என்பதை பற்றி
ஆராய உலகில்
இரண்டே விஷயம் தான் !
ஒன்று கடவுள் !
மற்றொன்று ஊசி !
நம்ப முடிய வில்லையா?
பரிசோதனை கூடத்திற்கு
போங்கள்
சரியென தெளிவிர்கள்.
அவன் இன்றி
ஓர் அணுவும் அசையாது !
இவன்
இன்றி ஒரு
அறுவை சிகிச்சை கூட
நடக்காது !
இதுவும் கடவுள் தான் !
குழந்தை கொடுப்பதில்
மருத்துவர்களால்
உருவாக்க பட்ட
செயற்கை கடவுள் !
இவன் நாடி
நரம்புகளின் நண்பன் !
நலமடைய வைப்பதில்
தலைவன் !
பேர் வாங்கி
தருவதில்
கவிஞருக்கு பேனா முனை
மருத்துவருக்கு
ஊசி முனை !
அறுவை சிகிச்சையின்
அஸ்திவாரம் ஊசி !
பரிசோதனை கூடத்தின்
பங்குதாரி ஊசி !
மருத்துவர்களின்
மகத்துவம் ஊசி !
மாத்திரைகளின்
மன்னவன் ஊசி !
ஊசியை நீ நேசி !
அப்போதுதான் உன்
வாழ்வு இனிக்கும் என்பதை
யோசி !
ஆன்மிகத்தில் சொல்ல
வேண்டுமானால் ,
ஊசி -விநாயகர் !
அறிவியலில் சொல்ல வேண்டுமானால்
ஊசி -அமீபா!!!!!!!!!!!!!