மொத்தமும் உனக்கே!!

என்மனம் தொடுக்கும்
ஒவ்வொரு கேள்விக்குறியிலும்
முற்றுப்புள்ளியாய்
அவள் புன்னகை...

முத்தம் கேட்டேன்
முடியாதென்றாள்....

எல்லை தாண்டவா என்றேன்
ஊராருக்கு எல்லை
உனக்காய் இல்லையென்றாள்...

தொட்டுக்கொள்ள தயங்கிநிற்க
மொத்தமும் உனக்கே
அனுமதியெதற்கு என்கிறாள்...

எழுதியவர் : முஸ்தாக் அஹமட் (24-Nov-12, 2:35 pm)
சேர்த்தது : Musthak ahamed TR
பார்வை : 229

மேலே