உயிர்மையின் வலி

உடல் ஈந்து
உதிரம் ஈந்து
உரு கொடுத்த உருவாள்

உயிர் ஈந்து
உணர்வீந்து
ஊறவிட்ட உருவான்

இவ்விரு உருவாரின்
இல்வாழ்க்கை
குழந்தை என்ற
ஒருவாரின் நல்வாழ்வில்

உருவாரின்
உணருரிமைகளை
ஒருவாரே நிறைவு செய்தல்

உருவார்களின்
உயிர் பிரிகையில்
ஒருவாரின் வலி

மூலங்களே
மூழ்கிப்போகையில்
மூளை சிதறும் வலி

முழுக்க உணர்ந்திருந்தாலே தெரியும்
முந்தையர்களின் நிலை

பிறப்பின் துவக்கம் முதல்
வாழ்வின் சீர்மைவரை
பிரியப்பட்டவர்களை இழந்து இழந்து
இறுகிப்போன இதயத்தை
இன்பத்தினால் கொடுத்த
இவ்வுருவார்களை இழக்கும் போது
இடி சபித்த
இமயம் போலே
இளகுகிறது
இருள்நெஞ்சம்

அனிச்ச தேவதை தொடுத்த கண்ணீர் பூக்கள்
அலறிக்கொண்டு
அபிஷேகிக்கின்றன
கன்ன கழுத்துக்களை

வயிற்றினுள்
ஒரு உயிரால் உலகம் கண்டேன்
வயிற்றின் வெளியே
இரு உயிரால் உலகம் அறிந்தேன்
இன்னும் மீதியுலகமிருக்க
இவ்வறியாமையாளனை
இங்கேயே துண்டித்து விட்டு

இயற்கைக் கற்றுக் கொடுக்குமாம்
இன்னும் பிற
இன்பதுன்ப உண்மைகளை

இவனை இழிவின்றிக் காத்த
இவ்விருவரையும்
இன்பமாக இமைக்கின்றேன்
இருள் குவிந்த
இமையின் பருப்புக்குள்ளே …

எழுதியவர் : சுகந்த் (25-Dec-12, 5:04 am)
பார்வை : 151

மேலே