குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கற் கூட்டம்
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-
தலைவன் பாங்கனைச் சார்தல்.
பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்
(இ-ள்) பாங்கன் தலைவனது மனமும் புயமும் வாடிய வேறுபாடு கண்டு இவ்வேறுபாடு வந்ததற்குக் காரண மென்னை யென்று கேட்டல்.
* மௌவல் வாணகையென்றும் பாடம்.
கட்டளைக் கலித்துறை
தீதோரை மாற்றித் திசைகாத்த தோசெஞ்சொ லேழிசையிற்
போதோடு பட்ட புலர்ச்சிகொ லோபொன்னி பூக(ச்)சென்னி
மீதோத மோது முறந்தைக் குலோத்துங்கன் வெற்ப(ண்)ணலே
யேதோ வறிகின்றி லேன்றிரு மேனி யிளைத்ததுவே! 43