நி அர்ஷீ அல்ஜ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நி அர்ஷீ அல்ஜ் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 7 |
நானும் முயற்சிக்கிறேன் வாழ்க்கையை முன்னேற்ற.....
கருவுக்குள் உயிராகி என் வெற்றிடத்தை நிரப்பினாய்...
வாழ்வின் அனைத்தும் கிடைக்கும்
உன் புன்னகை பூத்த முகத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது...
என் சோகங்கள் எல்லாம் சுகமாகும் உன் மழலையால்...
என் தோல்விகள் எல்லாம் வெற்றி ஆகும் உன் புன்னகையால்....
துவண்டு விழும் போதெல்லாம் என் சுமை தாங்கி நீ...
மகள் அல்ல நீ மகா சரித்திரம்..
என் வாழ்க்கை பக்கத்தை எழுதிய கவிதை நீ...
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்...
இந்த புதிரான உலகில் உனக்கான விடையை தேடி எடுப்பாய் என்று....
நீ தீண்டி செல்கிறாய்…
நான் என்னை உணர்கிறேன் ….
நீ சீண்டி செல்கிறாய் …
உன் அன்பை உணர்கிறேன் ….
தொடுதலில் மட்டும் இல்லை உணர்தலிலும் உண்டு...
ஒவ்வொரு முறையும் பிரிய நேர்கையில் ஏனோ தோன்றுகிறது........
தனிமையைக் காட்டிலும் உன்னுடைய சீண்டலில் தான் இன்பம் அதிகம் என்று மீண்டும் பிரிய நேர்கையில் சொல்ல வேண்டும் எங்கும் செல்லாதே என்று……
நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தில் கல்வி முதல் பயணம்........
கருவறையில் சுமந்ததனால் தாயானாள்
ஆனால் நீஉன் அறிவறையில் சுமந்து ஆசான் ஆனாய்......
என்னுள் இருந்த வித்தைகளை வெளிப்படுத்திய துரோணாச்சாரி ........
துவண்டு இருக்கும் போது துடுப்பில் ஏந்திச் சென்ற குகன்......
தெரியாது என்ற சொல்லை எங்கள் அகராதியில் இருந்து அகற்றிய பேரகராதி....
அவசியம் புரியா தற்குறியாய் இருந்தபோது படிப்பின் அதிசயத்தை உணர்த்திய
தன்னிகரில்லா ஆசான் நீங்கள்...
குயவன் செய்த பானையாய் மாணவர்களைகுலைத்து வடிவமைத்த பிரம்மன் நீங்கள்....
திசையறியா காட்டில் வாழ்ந்த அன்றிலாய் நாங்கள்....
திசை எட்டும் அதிசயம் சொன்ன ஆசானாய் நீங்
உன்னோடு தனிமையில் நிசப்தமாக பயணிக்க முற்படுகிறேன்... ஆனால், உன் அலைவரிசைகளோ என்னுள் பல நினைவுகளை கடத்துகிறது.......
ஒரு பொழுதும் தூங்காத உன் நினைவுகள்............ என் இமைகளை தாலாட்டிக் கொண்டிருக்கிறது....... செவிப்பறையில் நீங்காதகுரலாய்.
......தூங்கிய விழிகள் தூங்கியே போனால்.........என்னை சுமக்கும் போது நானும் சுமந்து செல்கிறேன்...... உன் நினைவுகளை........
நடந்து சென்றோம் ...
கால் வலிக்கும் என்றாய்
உட்கார்ந்து செல்வோம் என்றேன்..
தூக்கி செல்கிறேன் என்றாய்..
வலித்தது என் கால்கள் அல்ல... உனது மனம் தான்...
என்பதை உணர வைத்தாய்... தந்தையாக.....